அக்சயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்த ஷங்கர்

  • IndiaGlitz, [Saturday,January 27 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ச்ன்ஸ் மற்றும் VFX பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

இந்த படத்திற்காக ஏற்கனவே ரஜினிகாந்த் தனது இரண்டு கேரக்டர்களான சிட்டி மற்றும் வசீகரன் கேரக்டர்களுக்கு டப்பிங் செய்து முடித்துவிட்ட நிலையில் தற்போது அக்சயகுமார் கேரக்டருக்கு தமிழ் குரல் கொடுக்க சரியான நபரை ஷங்கர் தேடி வருகிறார். ஒரு முன்னணி நடிகரிடம் அக்சயகுமாரின் கேரக்டருக்கு குரல் கொடுக்க பேச்சுவார்த்தை  நடந்து வந்ததாகவும், அவர் பிசி காரணமாக இந்த வாய்ப்பை அந்த நடிகர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அக்சயகுமாரே தனது கேரக்டருக்கு தமிழில் பேச முன்வந்ததாகவும், ஆனல் அதற்கு வாய்ப்பு கொடுக்க ஷங்கர் மறுத்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் அவரது கேரக்டருக்கு வாய்ஸ் கொடுக்க ஒருவர் முடிவு செய்யப்படுவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

அக்சயகுமார் வேடத்தை ஏற்ற ஜெயம் ரவி

அக்சயகுமார் நடித்த இந்தியன் சீக்ரெட் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏ.கே.அஹ்மத் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'என்றென்றும் புன்னகை மற்றும் 'மனிதன்' படங்களை இயக்கியவர்

தேவர் மகன் போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 முதல் அரசியல் களத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து குதிக்கவுள்ள நிலையில் இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

விஜய்சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைமுன்னோட்டம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் இந்த ஆண்டின் முதல் படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'

நார்வே தமிழ் திரைப்பட விழா: விருதுகளை அள்ளிய 'அருவி'

ஒவ்வொரு ஆண்டும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் சில முக்கிய வீரர்களும், அவர்களுக்கான தொகையும்

2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் ஏலம் இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. இதில் அஸ்வின், மெக்கல்லம், பிராவோ, உள்பட சில வீரர்களை ஏலம் எடுத்த அணி மற்றும் அவர்களுக்கான தொகை