மூன்று பாகங்களில் உருவாகும் ஷங்கரின் அடுத்த படம்.. யார் ஹீரோ? என்ன கதை?

  • IndiaGlitz, [Thursday,July 11 2024]

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை அடுத்து ’கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை விரைவில் ஷங்கர் தொடங்க உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது தெரிந்தது.

சமீபத்தில் ’இந்தியன் 2’ புரமோஷன் நிகழ்ச்சியில் ஷங்கர் பேசிய போது தன்னுடைய அடுத்த படத்திற்காக மூன்று ஐடியாக்கள் வைத்துள்ளதாகவும், ஒன்று வரலாற்று கதை அம்சம் கொண்டது, இரண்டாவது சயன்ஸ் பிக்சன் கதை மற்றும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அளித்த பேட்டியில், ‘மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை 3 பாகங்களாக திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை படித்ததாகவும், அந்த நாவல் தனக்கு மிகவும் பிடித்து விட்டதை அடுத்து உடனே திரைக்கதையும் எழுதி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மூன்று பாகங்களாக இந்த நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள ஷங்கர், இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் சூர்யா ஒரு திரைப்பட விழாவில் ’வேள்பாரி’ நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய நிலையில் ஷங்கர் மற்றும் சூர்யா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் ’வேள்பாரி’ கேரக்டருக்கு விஜய் சேதுபதி சரியாக இருப்பார் என்று பரிந்துரை செய்து வருகின்றனர். இதற்கு ஷங்கர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இந்த வாரம் ஓடிடியில் ரூ.100 கோடி வசூல் குவித்த சூப்பர் ஹிட் படம்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஒரே மாதத்தில்

முதல் முறையாக வெளியான வரலட்சுமி திருமண புகைப்படங்கள்.. மணமக்களின் காஸ்ட்யூம் என்ன தெரியுமா?

நடிகை வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண புகைப்படங்கள் முதல் முறையாக தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் -வெங்கட்பிரபு திடீர் சந்திப்பு.. உருவாகிறதா 'மங்காத்தா 2?

அஜித் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் திடீரென சந்தித்து உள்ளதாகவும் இதனை அடுத்து 'மங்காத்தா 2' படம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'டீன்ஸ்' படத்திற்கு 100 ரூபாய் டிக்கெட்.. பல்டி அடித்தாரா பார்த்திபன்?

நடிகர் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு 100 ரூபாய் தான் கட்டணம் என்றும் பார்த்திபன் சமீபத்தில்

கலகலப்பான ரோம் காம் திரைப்படம் 'யோலோ': பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் S.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக  நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில்,