3 பாகங்கள், பிரமாண்ட பட்ஜெட், மல்டி ஸ்டார்.. இதுதான் ஷங்கரின் அடுத்த படம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் தேஜா நடித்து வரும் ’ஆர்சி 15’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் அவர் இன்னும் ஒரு சில மாதங்களில் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் ‘வேள்பாரி’ தான் என பிரபல இயக்குனர் ஒருவர் உறுதி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ’விருமன்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது ‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக எடுக்க இருப்பதாக சூர்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யா மற்றும் யாஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இந்த படம் இதுவரை தமிழில் இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘வேள்பாரி’ தான் ஷங்கரின் அடுத்த படம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தொடங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ஷங்கரின் படம் ‘வேள்பாரி’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'உன்னை நேசி, உன் உடம்பையும் நேசி': நிறைமாத கர்ப்பிணியான விஜய் பட நடிகையின் கிளாமர் பதிவு!

தளபதி விஜய் நடித்த படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உங்கள் உடலை நீங்கள் நேசிக்க வேண்டும்

தனுஷ் பாட்டு பாடும் அழகை ஆச்சரியமாக பார்க்கும் பிரபல பாடகி: வீடியோ வைரல்!

நடிகர் தனுஷ் தேசிய விருது பெற்ற மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும் அவர் தான் நடிக்கும் படங்களில் சில பாடல்களை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

நெருங்கிய தோழியின் கணவரையா திருமணம் செய்கிறார் ஹன்சிகா? அதிர்ச்சி வீடியோ

பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் அவரது பிசினஸ் பார்ட்னர் சோஹைல் கதுரியா என்பவருக்கும் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்

அம்மாவிற்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபலம்: நெட்டிசன்களின் ரியாக்சன்!

சமூக வலைதளங்களில் உள்ள பிரபலங்கள் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பயனர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே

எங்களுக்கு 5 ரன்கள் கொடுத்திருக்கணும்: விராத் செய்த தவறை சுட்டிக்காட்டிய வங்கதேச வீரர்

விராத் கோஹ்லி செய்த தவறுக்கு எங்களுக்கு 5 ரன்கள் கொடுத்து இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்திருந்தால் நாங்கள் தான் அந்த போட்டியை வென்று இருப்போம் என்றும் வங்கதேச விக்கெட் கீப்பர்