ஒரே நேரத்தில் இரண்டு படம்: இயக்குனர் ஷங்கரின் மெகா திட்டம்!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் பாபி சிம்ஹா மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துவரும் காட்சியின் படப்பிடிப்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு என்ன ஆச்சு என ராம்சரண் தேஜாவின் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் இதனை விளக்கும் வகையில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் தேஜாவின் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து நடைபெறும் என்று இயக்குனர் ஷங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போது ’இந்தியன் 2’ படத்தில் கமலஹாசன் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் ’ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதனை அடுத்து கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மீண்டும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ’இந்தியன் 2’ மற்றும் ’ஆர்சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி அவர் இயக்குவார் என்றும் இரண்டு படங்களையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அவர் முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கரின் திரையுலக வாழ்வில் ஒரே நேரத்தில் 2 படங்களை மாறி மாறி வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சூர்யா 42' படத்தின் 6 முக்கிய கேரக்டர்கள்: சிறுத்தை சிவாவின் சம்பவம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் பூஜையும் நடைபெற்று தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

கவினின் 'டாடா' படப்பிடிப்பு முடிந்துவிட்டதா? செம அப்டேட்!

நடிகர் கவின் நடித்த 'டாடா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 

பா ரஞ்சித்தின் முதல் 'ஏ' சர்டிபிகேட் திரைப்படம்: அப்படி என்ன இருக்கும் படத்தில்?

பா ரஞ்சித் இயக்கிய 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து முதல் முறையாக 'ஏ' சான்றிதழை பெறும் பா ரஞ்சித் இயக்கிய படம் என்ற

பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால் பரபரப்பு!

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும்

ரசிகர்கள் கலாய்த்து தள்ளினாலும் அமீர்கான் பட வசூலை முந்திய 'லைகர்'!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'லைகர்' திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில்