ஷங்கர்-ராம்சரண் படத்தின் சாட்டிலைட்-டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் அடுத்த ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் குறித்த செய்தி வெளியாகி திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரூ. 170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படம் திரையரங்குகளில் தான் நேரடியாக ரிலீசாகும் என்றாலும் திரையரங்கு ரிலீஸுக்கு பின்னர் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்காக மட்டும் ரூபாய் 350 கோடி கொடுத்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராம்சரண் தேஜா இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாலையில் பொழிந்த திடீர் பணமழை… துள்ளிக்குதித்த வாகன ஓட்டிகள்!

அமெரிக்காவில் உள்ள சாலையொன்றில் திடீர் பணமழை பொழிந்துள்ளது

11 வருட காதலியை கரம்பிடித்த “வலிமை“ நடிகர்… வைரல் புகைப்படம்!

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் “வலிமை“

சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதம் நடந்தால்? பழங்குடியின மக்கள் எச்சரிக்கை!

​​​​​​​சூர்யாவுக்கு எதிராக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் பாம்பை கொண்டு எறிவோம் என பழங்குடியினர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த வார வைல்ட்கார்ட் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் ஒரு போட்டியாளர் தானாகவே வெளியேறி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாமினேஷனில் சிக்கிய தாமரை-பிரியங்கா: இருவரில் ஒருவர் எலிமினேஷன் உறுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு போட்டியாளர்களை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.