அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித், தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரு பக்கம் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்; இன்னொரு பக்கம் பைக் பயணம், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் அஜித் கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி, அஜித் சமீபத்தில் கார் ரேசிங் அணியையும் தொடங்கியுள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேசிங் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் ஏற்கனவே தெரிந்தது.

மேலும், ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் அஜித் மற்றும் அவரது அணி கலந்து கொள்ள உள்ளது. இதற்கிடையில், அஜித்தின் மனைவி ஷாலினி, இன்ஸ்டாகிராமில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்: கார் ரேசிங்கில் மீண்டும் களமிறங்குவதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்புவதை செய்கிறீர்கள், உங்களுக்கும் உங்கள் அணிக்கும் எனது வாழ்த்துக்கள், என்று தெரிவித்துள்ளார். ஷாலினியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

விவாகரத்தில் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு உடன்பாடு இல்லையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை

'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நீ முடிவு பண்ண தேவையில்லை.. ஜாக்குலின் - பவித்ரா பயங்கர மோதல்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டாவது நாளில் மிகப்பெரிய சண்டை வந்தது

உன்னை மாதிரி கால் மட்டும் இருந்திருந்தா நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்: கவினின் 'பிளடி பெக்கர்' டீசர்.!

கவின் நடித்த 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

'அரண்மனை 4' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.