பிக்பாஸ் குடும்பத்தின் புதிய தலைவருக்கான வித்தியாசமான போட்டி

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

பிக்பாஸ் குடும்பத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களில் ஒருவரை வாரம் ஒருமுறை தலைவராக்கும் விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சினேகன், காயத்ரி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் இதுவரை தலைவராக பணிபுரிந்திருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் தேர்வில் ஓவியா, நமீதா, மற்றும் சக்தி ஆகியோர் பங்கேற்றனர். தலைவரை தேர்வு செய்ய ஒரு புதிய போட்டி இம்மூவருக்கும் நடத்தப்பட்டது. இரண்டு கைகளிலும் தண்ணீர் கப்புகள் கொடுக்கப்பட்டு பாதி உட்கார்ந்த நிலையில் இருக்க வேண்டும். யார் அதிக நேரம் இருக்கின்றார்களோ அவர் தான் தலைவர் என்று கூறப்பட்டது.

ஓவியா சிறிது நேரத்திலேயே தண்ணீரை கொட்டிவிட்டு போட்டியில் இருந்து வெளியேற, நமீதாவுக்கும் சக்திக்கும் போட்டி கடுமையானது. இறுதியில் நமீதாவும் போட்டியில் இருந்து வெளியேற சக்தி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின்போது தலைவர் கணேஷ், தன்னை ஊக்குவிக்கவில்லை என்றும் சக்தியை மட்டும் ஊக்குவித்ததாகவும் நமீதா தரப்பில் இருந்து புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விக்ரம் வேதா' ரன்னிங் டைம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கத்தில் முதன்முதலாக விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது...

பேக் பண்ணிய நமீதா! அடுத்து வெளியேற போவது யார்?

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, கலகலப்பு மற்றும் கொஞ்சம் சீரியஸ் கலந்து சென்று கொண்டிருந்தாலும் இன்றைய தமிழக மக்களின் ஹாட் டாக் இந்த நிகழ்ச்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை...

கமல்ஹாசனுடன் டெல்லி முதல்வரின் பிரதிநிதி திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சொற்பொர் நடந்து வருகிறது. தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள குறைகளை கமல் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர்கள் அவரை மிரட்டி வருகின்றனர்...

லண்டன் இசை நிகழ்ச்சி சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் நடத்திய 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியில் அதிகமான தமிழ்ப்பாடல்கள் பாடியதால் இந்தி பேசும் வட இந்தியர்கள் கோபத்தில் வெளியேறியதாக கூறப்படுகிறது...

அதுக்கு பதிலா நான் தூக்கில் தொங்கிறுவேன்: கஞ்சா கருப்பின் காட்டம் ஏன்?

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேறிய நடிகர் பரணி, நேற்று மீண்டும் தோன்றி தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார்.