சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷகிலாவுக்கு தடை.. ஷகிலாவின் பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,November 24 2022]

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகை ஷகிலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஷகிலா கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடந்த 80கள், 90களில் மலையாள கிளாமர் படங்களில் நடித்தவர் ஷகிலா என்பதும் அவரது படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மலையாள நடிகர்கள் சங்கம் அவரது படம் முக்கிய நாட்களில் வெளியிட தடைவிதித்தது. இதனை அடுத்து அவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்தார் என்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ’குக் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்னர் அவருடைய இமேஜ் டோட்டலாக ஆக மாறியது. அதுவரை கவர்ச்சி நடிகையாகவே பார்த்து வந்த பலர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை ஷகிலா அம்மா என அழைத்தனர்

இந்த நிலையில் மலையாள திரைப்படமான ’நல்ல சமயம்’ என்ற படத்தின் தொடக்கவிழா கோழிக்கோட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஷகிலா கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென வணிக வளாக நிர்வாகம் இந்த நிகழ்ச்சியில் ஷகிலா கலந்து கொள்ள தடை விதித்தது.

இதனால் ‘நல்ல சமயம்’ படத்தின் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷகிலா கலந்து கொள்ள அனுமதி கொடுத்தால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை நடத்துவோம் என படக்குழுவினர் உறுதியாக இருந்தனர்

இதுகுறித்து ஷகிலா கூறியபோது, ‘எனக்கு இது ஒன்றும் புதிது அல்ல என்றும் இதுபோன்ற அவமானங்களை பலமுறை நான் சந்தித்து இருக்கிறேன் என்றும் ஆனால் என்னை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை என்றும் கூறினார். ஷகிலாவுக்கு தடைவிதித்த வணிக வளாகம் இது குறித்து விளக்கம் அளித்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவரது வருகை தடை செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.