அட்லி-ஷாருக்கான் படம் தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,May 26 2021]

’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ’தெறி’, ‘மெர்சல்’ ‘பிகில்’ என மூன்று விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி என்பது தெரிந்ததே. அந்த நிலையில் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஷாருக்கான் நடிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திரைக்கதை அமைக்கும் பணியில் அட்லி பிஸியாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஷாருக்கான் தற்போது ’பதான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் அதன்பின் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியின் லேட்டஸ் வீடியோ: லாக்டவுனில் என்ன செய்கிறார் பாருங்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் பிஸியாக இருக்கும் நடிகர் நடிகைகள் முதல் அனைத்து நடிகர்களும் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து

இயக்குனர் ராஜூமுருகன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்!

'குக்கூ' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரபல பத்திரிகையாளர் ராஜுமுருகன் அதன்பின் 'ஜோக்கர்' மற்றும் 'ஜிப்ஸி' ஆகிய திரைப்படங்களை இயக்கினார்

கையூட்டு வாங்கிய அரசு அதிகாரி....! வைரலாகும் வீடியோ....!

நிலத்தை பதிவு செய்ய அரசு அதிகாரி ரமேஷ் என்பவர் லஞ்சமாக  ரூ.20 ஆயிரம் கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

22 நாட்கள் கொரோனா பாதிப்புக்கு பின் மீண்டு வந்தேன்: பிரபல தமிழ் நடிகர்

தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றனர் என்பதும் பெரும்பாலானோர் அதில் குணமாகினர் என்பதும் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்

உசந்துவிட்ட மனிதநேயம்… சாலையோர மக்களின் பசியை ஆற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்!

நெல்லையில் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்துவருபவர் தேவி. இவர் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது