அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

‘என்னை அறிந்தால்’, செக்க சிவந்த வானம்’ தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது ’அக்னி சிறகுகள்’, பாக்ஸர்’மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தமானார் என்ற செய்தி வெளியானது.

ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கிய குமரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண்விஜய் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடிக்கவிருப்பதாகவும், மேலும் இந்த படத்தில் முனிஷ்காந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான ‘சகா’, ‘நீயா 2’, ‘தில்லுக்கு துட்டு 2’, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் ஷபீருக்கு அருண்விஜய் தனது வாழ்த்தினை தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.