நடுரோட்டில் நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்த மர்ம நபர்கள்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

பாலிவுட் நடிகையும் மாடலுமான ஆகாஷ் சர்மா சமீபத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் நடுரோட்டில் திடீரென ஆகாஷ் சர்மாவின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து, 'உள்ளே என்ன இருக்கின்றது என்று காட்டு' என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் சர்மா, பேலன்ஸ் தவறி கீழே விழுந்து காயமடைந்தார்.

பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் தட்டி கேட்கவில்லை என்றும், தனக்கு உதவி செய்யக்கூட யாரும் வரவில்லை என்றும் ஆகாஷ் சர்மா தனது டுவிட்டரில் மன வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தான் காவல்நிலையத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அந்த மர்ம நபர்கள் பிடிபடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பத்தால் தனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்குதண்டனை உள்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்ற சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள போதிலும் நாட்டில் ஆங்காங்கே பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

More News

விக்ரம்-அக்சராஹாசன் படம் குறித்து ராஜேஷ் செல்வா

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் மற்றும் அக்சராஹாசன் நடிக்கும் படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது தெரிந்ததே.

திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் பிரபல நடிகருக்கு 2வது குழந்தை

பிரபல ஹாலிவுட் நடிகர் ட்வெய்ன் ஜான்சன் (Dwayne Johnson)  அவர்களை ஹாலிவுட் நடிகர் என்பதை விட WWF ராக் என்று கூறினால்தான் இந்தியாவில் பலருக்கு தெரியும். 

கட்டெறும்பு சிற்றெறும்பாகி காணாமல் போகும் கமல் கட்சி: அமைச்சர் ஜெயகுமார் 

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை மதுரையில் பிரமாண்டமான கூட்டம் ஒன்றில் ஆரம்பித்தார்.

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய முக்கிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில்

எரிந்த நிலையில் பிரபல டிவி நடிகை: கொலையா? தற்கொலையா?

கேரளாவை சேர்ந்த டிவி நடிகை கவிதா என்பவர் அவருடைய வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் கேரள டிவி நடிகர் நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது