கைதிகளுக்கும் மனைவியுடன் உறவு கொள்ள உரிமை: ஆயுள் கைதிக்கு 2 வாரம் விடுமுறை அளித்த நீதிமன்றம்

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

கைதிகள் என்று முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களும் மனிதர்களே!  சிறைக்கு செல்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியேற வேண்டும் என்பதே சிறைகள் அமைக்கப்பட்டதன் நோக்கம். அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குடும்பத்தினர்களை சந்திக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் வழக்கு ஒன்றில் கருத்து கூறியுள்ளது.

நெல்லையை சேர்ந்த சித்திக் அலி என்பவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். அவருடைய 32 வயது மனைவி மெஹ்ராஜ் என்பவர் தான் கருத்தரிப்பு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், தற்போது கணவர் துணை இருந்தால் தான் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே அவருக்கு 60 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்க சிறைத்துறையினர்களுக்கு உத்தரவிட்டது. ஆனால் சிறைத்துறையினர் கைதியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'கைதியின் மனைவி இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாமல் தற்போதுதான் கருத்தரிப்பு சிகிச்சை செய்துள்ளார். அவர் குழந்தை பெற்று கொள்ள விரும்புவது அவரது உரிமை. மேலும் கைதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் குடும்பத்தினர்களையும் சமூகத்தையும் பார்க்க அனுமதிப்பது அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். எனவே மனுதாரரின் கணவருக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

More News

20 வருடங்களுக்கு பின் மோகன்லாலுடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வரும் 'ஒடியன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து இளமையாக காட்சி தரும் மோகன்லால், பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரஜினியுடன் கூட்டணி: சமிக்ஞை காட்டிய கமல்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு தனித்தனி கட்சிகள் ஆரம்பித்து வரவுள்ளனர். இருவருக்கும் இடையில் அடிப்படையிலேயே வேற்றுமை இருப்பதால் தனித்தனியாக கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நான் எம்.எல்.ஏ-க்களை விட அதிகமாக சம்பாதிப்பவன்: விஷால்

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியை கட்டியணைத்து மலரும் நினைவுகளில் மூழ்கிய கமல்

இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் விருது விழா மும்பையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது: கமல்ஹாசன்

கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது என்றும், சில பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது; செய்துதான் காட்ட முடியும்.