பாகிஸ்தானை பந்தாடிய இளம் இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் வாழ்த்து

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 272 ரன்கள் குவித்தது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை இந்த பந்து வீச்சாளர்கள் பந்தாடி வெறும் 69 ரன்களில் சுருட்டினர். இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றி குறித்து கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவானும், அதிரடி ஆட்டகாரருமான சேவாக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என்ன ஒரு ஆக்ரோஷமான வெற்றி. நமது இளைஞர்கள் பாகிஸ்தானை முற்றிலும் சிதறடித்துவிடனர். இறுதி போட்டியிலும் வெற்றி தொடர வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இறுதி போட்டி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அணிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

'தல 59' படத்தின் இயக்குனர் குறித்த மாஸ் தகவல்

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக தல அஜித் இணைந்த 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது என்பதையும்

ஜீவா-நிக்கி கல்ராணியின் சாதனைக்கு ஏற்பட்ட சோதனை

பிப்ரவரி 9ஆம் தேதி ஜீவா, நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2' ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அதே தேதியில் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த இன்னொரு படமான 'கீ' திரைப்படமும் ரிலீஸ் ஆகும்

எமனாக மாறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிஷின்: வாலிபர் பரிதாப மரணம்

மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்று அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால்

தமன்னா மீது ஷூ வீசிய மாணவர்! காரணம் என்ன?

ஐதராபாத் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகை தமன்னா மீது மாணவர் ஒருவர் ஷூ வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 62 படத்தின் மாஸ் அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும்