கர்ப்பமாக இருந்த போது கணவன் எட்டி உதைத்ததாக கூறிய நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை தனது கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததாக காவல் நிலையத்தில் புகார் கூறிய சீரியல் நடிகைக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

‘செவ்வந்தி’ என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல சீரியல்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’கேளடி கண்மணி’ சீரியலில் நடித்த போது அந்த சீரியல் நாயகன் அர்னவ் உடன் திவ்யாஸ்ரீக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும் அதை அடுத்து திவ்யா ஸ்ரீ கர்ப்பமான பிறகு இரு தரப்பின் குடும்பத்தினர் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென திவ்யா ஸ்ரீ, அர்னவ் மீது போலீஸ் புகார் கொடுத்தார். அதில் தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது வயிற்றில் மிதித்ததாகவும் இதனால் தனது கர்ப்பம் கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அர்னவ் இடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யா ஸ்ரீக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல் தனது சமூக வலைதளத்தில் திவ்யா ஸ்ரீ பதிவு செய்திருந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.