close
Choose your channels

மனைவி பிரிந்து சென்றதால்… 18 பெண்களை கொலை செய்த கொடூரச் சம்பவம்!

Thursday, January 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹைத்ராபாத்தில் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றால் துக்கம் தீராக ஒரு நபர் தொடர்ந்து 18 பெண்களை கொடூரமாக கொலை செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்தே இப்படி பெண்களை கொடூரமாகக் கொலை செய்து வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

2 பெண்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மைனா ராமுலு என்ற நபரிடன் போலீஸார் ஏதேட்சையாக விசாரணை நடத்தி உள்ளனர். முன்னுக்கு பின்னாக பதில் அளித்த அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து தன்மீது ஏற்கனவே 16 கொலை வழக்கு உட்பட மொத்தம் 21 வழக்குகள் இருப்பதையும் அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இந்த 2 பெண்களையும் நான்தான் கொலை செய்தேன் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனால் 18 பெண்களை கொடூரமாக கொலை செய்தது உட்பட மொத்தம் 23 வழக்குகள் மைனா ராமுலு மீது பதிவாகி இருக்கிறது. மேலும் பெண்களிடம் தந்திரமாக பேசி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பின்னர் கொடூரமாகக் கொலை செய்ததாகக் விசாரணையில் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் 18 தொடர் கொலைகளை குறித்து தெலுங்கானா மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த நபருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment