close
Choose your channels

சீரியல் நடிகைக்கு 2வது திருமணம்.. கேரள தொழிலதிபரை கரம் பிடித்தார்..!

Monday, August 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் நடித்துள்ள நடிகை, கேரள தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற சீரியலில் நடிகை ஆக அறிமுகமானவர் சுபிக்ஷா. இவர் சிவி குமார் இயக்கத்தில் உருவான ’கொற்றவை’ உள்பட சில படங்களில் நடித்துள்ள நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’ரஜினி’ உள்பட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சுபிக்ஷா, சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனர் மானஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணமான இரண்டே வருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கேரள தொழிலதிபர் அவினாஷ் வாசுதேவன் என்பவரை சுபிக்ஷா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்களை சுபிக்ஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவினாஷ் வாசுதேவன்- சுபிக்ஷா தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment