close
Choose your channels

2வது திருமணம் செய்த சீரியல் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Monday, October 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ராதிகாவின் ’வாணி ராணி’ உள்பட பல தொடர்களில் நடித்த நடிகை நிவேதிதா என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகர் ஆரியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின்னர், சீரியல்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வந்த நிவேதிதா, ’திருமகள்’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த தொடரின் நாயகன் சுரேந்தர் என்பவரை காதலித்தார். அதன் பிறகு இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிவேதிதா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து சுரேந்தர்-நிவேதிதா தம்பதிகளுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment