சீரியல் நடிகையின் புதிய போட்டோஷூட்! இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,January 10 2021]

கமலஹாசனின் ’தேவர்மகன்’, சேரனின் ’பாண்டவர் பூமி’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின்னர் ’மொழி’ ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ ‘வாலிபராஜா’ ’மன்னார் வகையறா’ ’கஜினிகாந்த்’ உள்பட ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நடித்துள்ளவர் நடிகை நீலிமா ராணி. இவர் தற்போது விஷாலின் ‘சக்ரா’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாகவும் குணசித்திர கேரக்டர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ராதிகாவின் ’வாணி ராணி’ சீரியலில் இவர் நடித்துள்ள டிம்பிள் என்ற கேரக்டர் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் முன்னணி நடிகைகள் போலவே தற்போது சீரியல் நடிகைகளும் போட்டோஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வரும் நிலையில் நடிகை நீலிமாவும் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

34 வயதிலும் நடிகை நீலிமாராணி இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி தோற்றத்தில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.


More News

பிறந்த நாளில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சிவகார்த்திகேயனின் 'கனா' படத்திற்கு பிறகு நாயகிக்கு

ஆஸ்திரேலியா மைதானம் வரை சென்ற ஆரியின் டைட்டில் வின்னர் பதாகை!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 98 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் மூன்று வாரம் முடிந்த பின்னர் ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது.

கமல் சொன்னதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 97 நாட்கள் முடிவடைந்து தற்போது 98 ஆவது நாள் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு டிக்கெட் டு ஃபினாலே

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கினால் இது மூன்றும் இருக்காது: லோகேஷ் கனகராஜ்

'மாநகரம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் 'கைதி' என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கினார்

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் எடப்பாடி பழனிசாமி… பொள்ளாச்சி ஜெயராமன் புகழாரம்!!!

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கன் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என புகழ்ந்து பேசியுள்ளார்