திடீரென நின்று போன திருமணம்.. 50 சவரன் நகைகளை கொடுத்து ஏமாந்த சீரியல் நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

பிரபல சீரியல் நடிகைக்கு சிங்கப்பூரை சேர்ந்த பைலட் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென திருமணம் நின்று போய்விட்டதாகவும், மாப்பிள்ளை வீட்டாரிடம் 50 சவரன் நகை கொடுத்து, அந்த நடிகை ஏமாந்துவிட்டதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’வாணி ராணி’ உள்பட சில சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெனிபிரியா. இவருக்கும் சிங்கப்பூரை சேர்ந்த பைலட் துநேசன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நலங்கு நிகழ்ச்சியும் நடந்தது. துநேசன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அதை தெரிந்து கொண்டே ஜெனிபிரியா திருமணத்துக்கு சம்மதித்தார்.

மேலும், பெண் வீட்டார் திருமணத்திற்கு 200 சவரன் நகை வரதட்சனை கேட்ட நிலையில், 100 சவரன் போடுகிறேன் என்று ஜெனிபிரியா வீட்டினர் கூறியுள்ளனர். சமீபத்தில் சென்னை வந்த துநேசன் குடும்பத்தினர், 100 சவரன் நகைகளை கொடுங்கள்; நாங்கள் இப்போதே சிங்கப்பூருக்கு கொண்டு செல்கிறோம். திருமண நேரத்தில் கொண்டு வந்தால் கஸ்டம்ஸ் பிரச்சனை வரும், என்று கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய ஜெனிபிரியா 50 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் தான் துநேசன் குடும்பத்தினர் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை சிங்கப்பூருக்கு வரவழைத்து, ஜெனிபிரியாவின் பொருள்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து அனுப்பிவிட்டதாகவும், நகைகளை கேட்டதற்கு நீ நகைகளை எதுவும் கொடுக்கவில்லை என்று கூறியதுதான் ஜெனிபிரியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை திரும்பிய ஜெனிபிரியா சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும், வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

More News

பாண்டி பஜார்ல பிளவுஸ் தைக்க வந்தவங்க இவங்க.. பிக்பாஸ் 8 போட்டியாளர் குறித்து ரவீந்தர்

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்தர் சமீபத்தில்

ஒரே படத்தில் இருந்து விலகிய சமந்தா, ஸ்ருதிஹாசன்.. இருவரும் விலகியதற்கு ஒரே காரணம்..!

'சென்னை ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் சமந்தா நடிக்க இருந்த கேரக்டரில் ஸ்ருதிஹாசன்

'குட் பேட் அக்லி' ஸ்பெயின் படப்பிடிப்பில் இருந்த த்ரிஷா.. திடீரென சென்னை திரும்பியது ஏன்?

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் நிலையில், இந்த படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சென்னை திரும்பி விட்டதாக

இந்த வார டிஆர்பி ரேட்டிங்.. முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான்..!

தமிழ் தொலைக்காட்சிகளை பொருத்தவரை சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் கடும் போட்டி டிஆர்பியில் நிலவி வருகிறது

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. இன்னொரு ஆச்சரியமான தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும்,