விருது பெற்ற கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு.. குஷியில் சீரியல் நடிகர்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழாவில் முக்கிய விருதை பெற்ற சீரியல் நடிகர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி உள்பட பட தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்தவர் நடிகர் தீபக். குறிப்பாக ’அண்ணி’ ’கீதாஞ்சலி’ ’மலர்கள்’ ’பந்தம்’ ’தென்றல்’ ’திருமதி செல்வ’ம் உள்ளிட்ட சீரியல்களை நடித்தவர் என்பதும் சமீபத்தில் முடிவடைந்த ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கூட முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பதும் தெரிந்தது. அது மட்டும் இன்றி ’ஜோடி நம்பர் ஒன்’ உள்பட பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் விகடன் விருந்து வழங்கும் விழாவில் நடிகர் தீபக்கிற்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. இந்த அதிர்ஷ்டம் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது ஆடிஷன் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக தீபக் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் கலந்து கொள்வது குறித்து தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

More News

ரஜினி, தனுஷ், சிம்பு பட நாயகிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. க்யூட் புகைப்படங்கள்..!

ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் சிம்பு படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வங்கி கணக்கில் பணம்: விஜய் கொடியேற்றிய தினத்தில் ரஜினி செய்த தரமான செயல்..

தளபதி விஜய் நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அதே நாளில் ரஜினிகாந்த் மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் கல்வி உதவிக்காக தனது

நாங்க சோத்துக்கு கஷ்டபடுறத  நீ வந்து பாத்தியா ? பயில்வான் ரங்கநாதனுக்கு  சுருளிராஜன் மனைவி பதிலடி..!

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜனுக்கு மது பழக்கம் இருந்தது என்றும் சோத்துக்கு அவரது குடும்பம் கஷ்டப்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்

கிரிக்கெட் அணி உரிமையாளராகும்  கீர்த்தி சுரேஷ்.. சமந்தாவும் ஒரு அணி உரிமையாளர்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் விளையாட்டுத் துறையில் களம் இறங்கி இருப்பதாகவும் அவர்கள் விளையாட்டு

சொர்க்கத்துக்கு யார் செல்வார்.? நரகத்துக்கு யார் செல்வார்.? -ரங்கராஜன் நரசிம்மன்

பிரபல ஆன்மீக பேச்சாளர் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த இரண்டாவது பேட்டியில் ஆன்மீகத்தின் அடிப்படை கேள்விகளுக்கு ஆழமான விளக்கம் அளித்துள்ளார்.