உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும்தான் மேட்டரு: செல்வராகவனின் 'கொரோனா' பதிவு

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரனோ வைரஸ் பாதிப்பில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார அமைச்சகம் வரை பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாஸ்க் குறித்து பல்வேறு விழிப்புணர்வு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வருவதோடு மீம்ஸ்களும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரபல இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கிய ’புதுப்பேட்டை’ திரைப்படத்தில் தனுஷ் மாஸ்க் அணிந்துள்ளது போல ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ’இப்ப எல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு.. அது மட்டும் தான் மேட்டரு... என்று குறிப்பிட்டுள்ளார் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் மாஸ்க் குறித்து செல்வராகவன் பதிவு செய்த இந்த மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கனவுகளுடன் வந்தார், கனவு முடிந்ததும் கிளம்பிவிட்டார்: விஜய்வசந்த் உருக்கமான பதிவு

தனது தந்தை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு பல கனவுகளுடன் வந்தார் என்றும் அவர் தன்னுடைய கனவு அனைத்தையும் நனவானவுடன் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுவிட்டார்

தனி விமானம் மூலம் காதலருடன் கொச்சி சென்ற நயன்தாரா: என்ன காரணம்?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் திடீரென கொச்சி சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதலில் அம்மா, அப்புறம் அப்பா: கொரோனா மரணம் குறித்து தமிழ் நடிகையின் அதிர்ச்சி தகவல்

தனது நெருங்கிய தோழி ஒருவரின் அம்மா முதலில் கொரோனாவுக்கு பலியானதாகவும் அதனை அடுத்து நேற்று அவருடைய தந்தையும் கொரோனாவுக்கு பலியானதாகவும் தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 

கனமழையில் இடிந்து விழுந்த சுவர்- 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!!!

தென்மேற்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக வட இந்திய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இரட்டை குழந்தைகள் இறந்த நிலையில் விவசாயிக்கு கொரோனா!!! மனஅழுத்தத்தால் ஏற்பட்ட விபரீதம்!!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது