close
Choose your channels

சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமாகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என்றும் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் நீதான் என்றும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவ்வப்போது இயக்குனர் செல்வராகவன் தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் திருமண நாளை அடுத்து ஒரு ஸ்பெஷல் பதிவு செய்துள்ளார்.

அதில் ’உன்னுடன் 13 வருடங்கள் வாழ்ந்தது சிறப்பான வருடங்கள். நீ இல்லாமல் இந்த 13 வருடங்களில் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் நீ, இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். செல்வராகவனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் விஷாலின் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் விரைவில் அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.