நிறைவேறாத ஆசை குறித்து ஏக்கத்துடன் பதிவிட்ட செல்வராகவன்.. இனியாவது நிறைவேறுமா?

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் தனது முக்கிய ஆசை நிறைவேறவில்லை என்று கூறி புதிய கெட்டப்புடன் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் பல வெற்றி படங்களை இயக்கிய நிலையில் தற்போது அவர் ’7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ உள்பட ஒரு சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவனுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது மற்றும் தனது குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் செல்வராகவன் முரட்டு மீசை உடன் கூடிய ஒரு புகைப்படத்தை பதிவு செய்து, ‘நான் எப்போதும் ஒரு போலீஸ்காரராக வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அது என் வாழ்க்கையில் நடைபெறவே இல்லை, ஆனால் அதே நேரத்தில் போலீஸ் லுக்குடன் இருப்பதை விரும்புகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.