கர்வம் இருக்கணும், கடிகாரத்தை பார்க்க கூடாது: செல்வராகவன் கூறிய பொன்மொழி..!

  • IndiaGlitz, [Saturday,June 22 2024]

பிரபல இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில பொன்மொழிகளையும் அறிவுரைகளையும் மக்களுக்கு தெரிவித்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் கூறியபோது ’நாம் செய்கிற வேலையில் கர்வம் இருக்க வேண்டும் என்றும் வேலை செய்யும் போது கடிகாரத்தை பார்க்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:

பொதுவாக இப்போது அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், மற்ற இடத்திலும் சொல்லும் ஒரு புகார் என்னவெனில் இந்த வேலை ரொம்ப கொடுமையாக இருக்கிறது, வறுத்தெடுக்கிறார்கள் என்று வேலையை பற்றி பல புகார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், வல்லரசு நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்.

வல்லரசு நாடுகளில் எந்த வேலையாக இருந்தாலும் தான் செய்கிற வேலையில் ஒரு கர்வம் இருக்கும், கர்வம் மண்டையில் இருக்க கூடாது, ஆனால் செய்கிற வேலையில் கர்வம் இருக்க வேண்டும். நான் ஆட்டோ டிரைவர், நான் டாக்ஸி டிரைவர் என்று எந்த வேலை செய்கிறோமோ அந்த வேலையை கர்வமாக செய்ய வேண்டும்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் செய்கிற வேலையை மிகவும் மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். அதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட தேவையில்லை, வேலை செய்யும் போது கடிகாரம் பார்க்காமல் இருந்தால் கண்டிப்பாக அந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்யலாம் . ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மலையேறும் போது உச்சியை பார்க்க கூடாது, பார்த்தால் ஏறும் மனப்பான்மையே போய்விடும், பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏற வேண்டும், அது மாதிரி தான் நாம் செய்யும் வேலையும்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

 

More News

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தானா? நடிகர் ராமராஜன் ஆதங்கம்..!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கமல்ஹாசன், விஜய் உள்பட பல திரையுலக பிரபலங்கள்

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம்.. சாகசம் செய்ய முயன்ற சிறுவன் படுகாயம்..!

இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்றாலும் கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட துக்க சம்பவம் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் முடிந்தால் கள்ளக்குறிச்சியில்

5 ஹீரோயின்களுடன் புலவர் புலமைப்பித்தன் பேரன் நடிக்கும் படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை

தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலங்கள்..!

தளபதி விஜய் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த குடையின் கீழ் இருந்த நடிகை இவர் தான்.. 'கோட்' ரகசியத்தை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது..