close
Choose your channels

எனக்கே சொந்தமான தீபிகா படுகோன்: செல்வராகவன் பதிவு செய்த புகைப்படம்!

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எனக்கே சொந்தமான தீபிகா படுகோன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் செல்வராகவன் அதன்பின் ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளிவந்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவிருக்கும் ’நானே வருவேன்’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களை அடுத்தடுத்து செல்வராகவன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படங்களின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷுடன் ’சாணி காகிதம்’ என்ற திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் செல்வராகவன் சமீபத்தில் தனது மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, அதில் கேப்ஷனாக ‘எனக்கே எனக்கு சொந்தமான தீபிகா படுகோன்’ என்று கவிதை நயத்துடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment