close
Choose your channels

ஒரே ஒரு புகைப்படம்: தன் மீதான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்

Friday, December 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இயக்குனர் செல்வராகவன் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது செல்வராகவன் ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவு வைரலானது. அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது:

தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம்.
நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ?
துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.

இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் என நெட்டிசன்கள் விவாதம் செய்துகொண்டு இருந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள் என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக பரவிவரும் வதந்திகளும் புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் செல்வராகவன் தற்போது ’பகாசுரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.