கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ’சாணிக்காகிதம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சாணிக்காகிதம்’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இந்த படத்தில் இருவரும் கொள்ளையர்களாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

More News

ஓடிடியில் சந்தானம் நடித்த அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: வைரல் வீடியோ

ஆடை மாற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப துணிந்த இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

லைகா நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம்: நீதிமன்றத்தின் அதிரடி குறித்து பிரபல நடிகர் டுவிட்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மனைவியை 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய கணவர்: அதிர்ச்சி காரணம்!

தனது மனைவி ஆண் குழந்தை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 8 முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமும் திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்