ரஜினியின் தேவை தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதை சமீபத்தில் உறுதி செய்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்து தெரிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சீமான் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என கேள்வி எழுப்பிய சீமான், ரஜினி என்ன மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுத்திருக்கிறார்? தீர்வு சொல்லி இருக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ரஜினியின் தேவை தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் வருகை குறித்து சீமானின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.