close
Choose your channels

ராகவா லாரன்ஸின் ஆவேச அறிக்கைக்கு பின் வருத்தம் தெரிவித்த அரசியல் தலைவர்

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் தலைவர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையை படிப்பவர்களுக்கு அவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் குறித்துதான் கூறியிருந்தார் என்பது புரிந்திருக்கும்.

இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து இன்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளித்ததாவது: 'லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் என் கட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படி செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

சீமானின் இந்த பதிலை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.