சிம்பு, சூர்யா தனுஷ் நடிகை மீது தேச துரோக வழக்கு

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நல்ல நாடு என்று பேட்டி ஒன்றில் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஒருவர். சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த ரம்யாதான் அந்த நடிகை
நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரம்யா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ' மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது போல் பாகிஸ்தான் நரக நாடு கிடையாது. அது ஒரு நல்ல நாடு. அங்குள்ள மக்கள் நம்மை போலவே உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பெங்களூரு பாஜகவினர் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில நீதிமன்றம் ஒன்றில் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், இதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் ரம்யா கூறியுள்ளார்.