கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும், தமிழக அரசின் பொறுப்புள்ள நடவடிக்கையாலும் கொரோனா வைரஸ் பெரும் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே குணமான நிலையில் தற்போது இரண்டாவது நபரும் குணமாகி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து இரண்டு ரத்தப் பரிசோதனை செய்ததில் இரண்டிலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் படுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டாவது நபராக இந்த நபர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி இருப்பது ஒரு குட் நியூஸாக கருதப்படுகிறது

More News

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்

ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!

இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பெப்சி தொழிலாளர்களுக்கு 100 மூட்டை அரிசி கொடுத்த பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களான பெப்சி தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வருமானமின்றி

'தல' வீட்ல இருக்காரு, நீங்களும் வீட்ல இருங்க: திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து, தங்களை தாங்களே வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வது

ஊரடங்கு உத்தரவிற்கு பின்னரும் டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

உலகமெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் சுமார் 500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி விட்டது.