9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கிய நிலையில் கூடிய விரைவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

அந்த வகையில் சற்று முன்னர் தமிழக அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அதே நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் உட்கார வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

More News

பிக்பாஸ் நடிகை படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் கிரிக்கெட் வீரர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான சாக்ஷி அகர்வால் ஏற்கனவே நான்கு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது

சூர்யா-ரம்யா பாண்டியன் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது: 'கபாலி' வசனத்துடன் தமிழ் நடிகையின் டுவீட்

தமிழக அரசியலில் சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது என தமிழ் நடிகை ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் 

'கர்ணன்' படத்தை அடுத்து 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த 'கர்ணன்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இன்று காலை வெளியானது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் எப்போது? கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது