என்னால் 20 நிமிடம் கூட இருக்க முடியவில்லை.. அவர் எப்படி 11 வருடங்கள் இருந்தாரோ? பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

சாவர்க்கர் இருந்த சிறையில் என்னால் 20 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை என்றும் அவர் எப்படி 11 வருடங்கள் அந்த சிறையில் இருந்தார் என்றே தெரியவில்லை என்றும் சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீர சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. ரன்தீப் ஹூடா இயக்கத்தில் ரன்தீப் மற்றும் உட்கார்ஷ் நைதானி திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையை நேரில் பார்க்க இயக்குனர் ரன்தீப் ஹூடா முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்தமானில் உள்ள காலாபாணி சிறைச்சாலைக்கு சென்று அவர் சாவர்க்கர் இருந்த அறைக்கு சென்று தன்னை தானே பூட்டி கொண்ட நிலையில் அந்த அறையில் அவரால் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

நம்மால் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாத ஒரு 7க்கு 11 அடி சிறையில் எப்படி 11 ஆண்டுகள் சாவர்க்கர் தனிமையாக அடைந்து கிடைத்திருப்பார் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கரின் இணையற்ற தியாகத்தை நினைத்துப் பார்க்கிறேன், அவரை சில அமைப்புகள் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

More News

அந்த பக்கம் ராமர் கோவில், சசிகலா.. இந்த பக்கம் ஸ்டாலின், கீ வீரமணி.. எல்லா பக்கமும்  ரவுண்டு கட்டும் ரஜினி..!

ஒரு பக்கம் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சென்ற ரஜினிகாந்த், அதனை அடுத்த சில நாட்களில் சசிகலாவின் புதிய வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த முறை சிறப்பு தோற்றத்தில் யாரும் கிடையாது: பிரபல ஹீரோவிடம் கதை கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து ஒரு எம்பி.. பாரதிய ஜனதா கட்சியின் மாஸ் திட்டம்..!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் திரை உலகை சேர்ந்தவர்கள் இணைந்து வரும் காட்சியையும், அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படு

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை.. தயாரிப்பாளர் குறித்து அமீர்..!

டெல்லியில் ரூபாய் 2000 கோடி போதை மருந்து கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் உண்டு என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக

வேற லெவலில் மாஸ் லுக்.. சிம்புவின் 'எஸ்டிஆர் 48' செம்ம வீடியோ..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'எஸ்டிஆர் 48' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக