நம்மைவிட அவர்க்ள் உயர்ந்தவர்கள்; சத்யராஜ்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக திரையுலகினர்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர்களின் போராட்டம் உணர்ச்சிப்பெருக்காக உள்ளது. இந்த நிலையில் காவிரிக்காக போராடும் போராளிகளை வணங்குவதாகவும் போற்றுவதாகவும் சத்யராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது;

எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வருமானம் செய்யும் ஒரு பயணம் இருக்கின்றது. நமக்காக போராடும் போராளிகளுக்கும் ஒரு குடும்பம் இருக்கின்றது, வருமானத்தை நோக்கிய பயணமும் இருக்கின்றது. ஒரு பொதுநலத்திற்காக, சுயநலம் கருதாமல் குடும்பத்தை மறந்து வருமானத்தை துறந்து நமக்காக போராடும் போராளிகள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்

இந்த போராட்டத்தில் ஈடும்படும்போது கைது செய்யப்படலாம், வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் ஒரு பொதுநலத்திற்காக அவர்கள் போராடுகின்றனர். இன்று அவர்களுடைய போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டிருக்கின்றது. அந்த போராட்டக்களத்தில் நிற்பவர்கள் நம்மைவிட மிகவும் உயர்ந்தவர்கள். நான் அவர்களுடைய தியாகத்தை வாழ்த்துகிறேன் என்று சொல்ல வரவில்லை. என்னைவிட உயர்ந்த அந்த போராளிகளை வணங்குகிறேன் போற்றுகிறேன்' என்று சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

More News

கர்நாடக மக்களுக்கு நன்றி கூறிய சிம்பு

ஏப்ரல் 11ஆம் தேதி கன்னட மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து இருமாநில மக்களுக்கும் இடையே எந்தவித வெறுப்பும் இல்லை என்று நிரூபியுங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஒரே படத்தில் நயன்தாரா-தமன்னா

முதல்முறையாக நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் ரெய்னாவுக்கு முதன்முதலாக  வந்த சோதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன், அதிக போட்டிகளில் விளையாடிவர், எந்த போட்டியையும் மிஸ் செய்யாதவர் ஆகிய பெருமைகளை கொண்டவர் சுரேஷ் ரெய்னா.

பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கமல்ஹாசன் வீடியோவில் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்