எந்த கட்சியில் சேரப்போகிறார் சத்யராஜ் மகள்? அவரே அளித்த பேட்டி!

  • IndiaGlitz, [Sunday,August 30 2020]

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் அவர் சமீபத்தில் ஒரு இயக்கம் ஆரம்பித்தார் என்பதும் அந்த இயக்கத்தின் பெயர் ’மகிழ்மதி இயக்கம்’ என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். “மகிழ்மதி இயக்கம்‌' அரசியல்‌ கட்சியோ, சாதி, மதம்‌ சார்ந்த அமைப்போ கிடையாது என்றும், வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ பகுதிகளில்‌ ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர்‌ இயக்கம்‌ என்றும், வறுமையில்‌ வாடும்‌ குடும்பங்களுக்குத்‌ தரமான உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம்‌ மேற்கொள்ளும்‌ என்றும் திவ்யா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திவ்யா, தான் விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், எந்த கட்சியில் சேரப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘ஜாதி, மதம் சார்ந்த கட்சியில் கட்சியில் சேரமாட்டேன் என்றும், அதேபோல் ரஜினி, கமல் கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் நல்லகண்ணு என்று அவர் கூறியுள்ளதால் அதிமுக அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தான் எந்த கட்சியில் சேர்ந்தாலும் தனது அப்பாவின் ஆதரவு கண்டிப்பாக தனக்கு இருக்கும் என்றும், அப்பா தான் தனது முதல் உயிர்த்தோழன் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More News

3 ஆண்டாக கர்ப்பமாக உள்ளேன், குழந்தை வெளியே வரமாட்டேங்குது: சமந்தா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திருமணத்திற்கு பின்னரும் பல வெற்றி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பிக்பாஸ் 4' நிகழ்ச்சியில் அஜித், விஜய் பட நடிகை?

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 4'நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.250 கோடி சம்பளமா? திரையுலகினர் ஆச்சரியம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவல்!

'அட்டக்கத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித், அதன்பின் 'மெட்ராஸ்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

முதலாளியும் நடிக்கலாம் என்பதை ஆரம்பித்து வைத்தவர் வசந்தகுமார் தான்: பிரபல தமிழ் ஹீரோ புகழாரம்

கன்னியாகுமரி தொகுதி எம்பியும் பிரபல தொழிலதிபருமான எச்.வசந்தகுமார் அவர்கள் நேற்று முன் தினம் மாலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.