நான் அப்பாவாகிவிட்டேன்.. 'சத்யா' சீரியல் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ’சத்யா’ என்ற சீரியலில் நடித்த நடிகர் தான் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜீ தமிழ் சேனலில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ’சத்யா’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் பிக்பாஸ் விஷ்ணு நடித்த இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’சத்யா’ தொடரின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்ட இந்திரன் என்பவர் ஷிவன்யா என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திரன் - ஷிவன்யா தம்பதிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ’நான் அப்பா ஆகிவிட்டேன், நாங்கள் மகாலட்சுமியால் ஆசிர்வதிக்கப்பட்டோம்’ என்று கேப்ஷன் உடன் மகிழ்ச்சியாக தனது ரசிகர்களுக்கு இந்த செய்தியை அறிவித்துள்ளார். மேலும் குழந்தையின் காலில் தலையை வைத்து வணங்குவது போன்ற புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மலர்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இந்திரன், தான் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்துள்ளேன் என்றும் ’சத்யா’ தொடர் தான் தனக்கு அடையாளத்தை கொடுத்தது என்றும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.