சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் சசிகுமார்!

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்று நேற்று அறிவிக்கப்பட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சசிகுமார், சஸ்பெண்ட் ஆன போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்த படத்தின் திரைக்கதையை எழுதியபோது நான் சசிகுமாரை நினைவில் கொள்ளவில்லை. ஆனால் முழு திரைக்கதையை எழுதி முடித்ததும் இந்த கேரக்டருக்கு சசிகுமார் பொருத்தமாக இருப்பார் என என் மனதில் பட்டது. இதனையடுத்து சசிகுமாரிடம் கதையை கூறியபோது அவர் எனக்கு பாராட்டு தெரிவித்து இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். தொடர்ந்து கிராமத்து கதையில் நடித்து கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இந்த கேரக்டர் நிச்சயம் புதுமையானதாக இருக்கும்.

இந்த படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகி மானசா என்றாலும் அவர் சசிகுமாருக்கு ஜோடி இல்லை. அவரது கேரக்டர் இந்த படத்தில் தனி டிராக்காக இருக்கும்., இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்று இயக்குனர் ஜிஎன் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.