ஜெயலலிதாவின் பதவியை குறிவைத்து காய்நகர்த்தும் சசிகலாபுஷ்பா?

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

நடிகையாக இருந்த ஜெயலலிதா முதன்முதலில் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் கொடுத்த பதவி அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர். அதன்பின்னர்தான் படிப்படியாக அரசியலில் வளர்ச்சியடைந்து பின்னர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும், அவர் கைப்பற்றினார்.

இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக விரைவில் சசிகலா புஷ்பா நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவுக்கு நேரெதிராக செயல்பட்டவர் சசிகலாபுஷ்பா. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான விண்ணப்பம் வாங்க சென்ற சசிகலாவின் கணவர் தாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் இருந்து  சமீபத்தில் வெளியேறிய சசிகலாபுஷ்பா தற்போது தினகரன் அணியில் தஞ்சமடைந்துள்ளார், அவருக்கு தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை தர தினகரன் சம்மதித்துள்ளதாகவும், அதற்கு முன்னர் அவர் சசிகலாவை சந்தித்துவர ஆலோசனை கூறியுள்ளதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவெ விரைவில் சசிகலா-சசிகலாபுஷ்பா சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

More News

சிஎஸ்கே மாஸ்ஸா பண்றாங்க: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பெருமிதம்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

காவிரியும் கருப்பு உடையும்: ரஜினி இதை செய்வாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீவிரமான போராட்டத்தை திசை திருப்பும் வகையில் உள்ள ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் வீரர்களை கடத்துவோம்

காமன்வெல்த் மைதானத்தில் வீராங்கனைக்கு காதல் புரபோஸ் செய்த வீரர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று வரும் நிலையில் மைதானத்தில் ஒரு ஜோடிக்கும் கிட்டத்தட்ட நிச்சயம்தார்த்தமே ஆகிவிட்டது.

சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம்