ராஜதந்திரம் அனைத்தும் வீணா பேச்சா? சசிகலா விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி செக்!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தமிழக அரசியல் களத்தை மாற்றி விடுவார், அதிமுக கட்சியில் பிளவுகளை ஏற்படுத்துவார் எனப் பல கருத்துக் கணிப்புகளும் விமர்சனங்களும் கூறப்பட்டன. இந்நிலையில் சசிகலாவின் வருகையை தமிழக முதல்வர் மிக சாதுர்யமாக கையாண்டார் எனவும் தனது அதிரயான நடவடிக்கையால் கட்சிக்குள் ஒற்றுமை மனப்பாங்கை வளர்த்து வருகிறார் எனவும் அரசியல் நோக்கர்களே தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் களத்தில் தனது ஆளுமைய காட்டிவரும் தமிழக முதல்வரின் நடவடிக்கையால், ஒட்டுமொத்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அணியிலேயே பக்க பலமாக நிற்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தொடர்ந்து சசிகலாவிற்கும் தினகரனுக்கும் எதிரான கருத்துகளை ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஓ.எஸ். மணியன் போன்ற மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா குறித்து பேசிய தமிழக முதல்வர் “தினகரனை நம்பி செயல்படுபவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டி வரும்” என்றும் முன்னதாக அதிமுகவில் இருந்து வெளியேறிய 18 எம்.எல்.ஏக்கள் தற்போது தங்களது பதவிகளை இழந்து வருத்தம் தெரிவித்து வருவதைக் குறித்தும் தமிழக முதல்வர் எடுத்துக் காட்டி இருக்கிறார். மேலும் தமிழக முதல்வரின் சாதுர்யமான நடவடிக்கை மற்றும் செயல்திட்டங்கள் போன்றவை அதிமுகவில் ஒற்றுமையை நிலைநிறுத்தும் என்றும் சில அரசியல் நிபுணர்கள் பாராட்டி வருகின்றனர்.

More News

'குக் வித் கோமாளி' தர்ஷாவின் வேற லெவல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நான் ஒரு ராணி, நான் ஒரு கனவு: ஷிவானியின் கவர்ச்சி போஸ் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குபிடித்து சிங்க பெண்ணாக வெளியேறினார் என்பது தெரிந்ததே.

சிம்புவுக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பரிசு: வைரல் வீடியோ!

நடிகர் சிம்பு சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்துக்களை தெரிவித்தது என்பதும் அதுமட்டுமின்றி இரவு 12 மணியிலிருந்து

ஆண் குழந்தைக்கு தாயான 'விக்ரம்' பட நடிகை: வைரல் புகைப்படம்!

கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனிதா. அதன் பின்னர் விக்ரமின் 'சாமுராய்' விஜய்யின் 'சுக்ரன்'