'சர்கார்' ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவல்

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களுக்காக தீபாவளி அன்று இந்த படம் வெளிவரவுள்ள நிலையில் தற்போது இந்த படம் அதே தீபாவளி தினத்தில் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் 'சர்கார்' படத்தின் பாடல்களை தமிழில் விவேக் எழுதியுள்ள நிலையில் தெலுங்கு பதிப்பிற்கு பாடலாசிரியர்கள் சந்திரபோஸ் மற்றும் வனமல்லி ஆகியோர் பாடல் எழுதி வருவதாகவும் மிக விரைவில் தெலுங்கு பாடல்களின் ஒலிப்பதிவு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் இந்த படம் வெளிவரவுள்ளதால் ஓப்பனிங் வசூல் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அடுத்தடுத்து இரண்டு புயல்கள்; தமிழகதில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் ஆகிய இரண்டு புயல்களால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும்,

புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்ற அபிராமி: காரணம் என்ன?

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த குன்றத்தூரை சேர்ந்த அபிராபி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

4 மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'சாதீய காதல் கதை'

சமீபத்தில் வெளியான சாதிய காதல் கதை படமான 'பரியேறும் பெருமாள்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

ஐஸ்வர்யா வெளியேறாதது வியப்பை அளித்தது: ரித்விகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தபோது திடீரென சென்றாயன் வெளியேறியது