ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக அதிமுக அமைச்சர்கள் புகார் கூறியதால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது 'சர்கார் படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசின் தரப்பில் வாதாட்டப்பட்டது.

இதுகுறித்து முருகதாஸ் அவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர், நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

More News

'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல்

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறா

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபாலுடன் திருமணமா? விஷ்ணுவிஷால் விளக்கம்

சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலாபாலை திருமணம் செய்யவிருப்பதாக கோலிவுட்டில் வதந்தி பரவியது. இதுகுறித்து ஒருசில இணையதளங்களில் செய்தியும் வெளியானது

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி கொடுத்த பிரபல நிறுவனம்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்கு திரையுலகினர் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அதிகபட்சமாக லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி கஜா நிவாரண நிதியாக அளித்தது.