close
Choose your channels

என்னை அவர் ஆசிர்வதித்தது நெகிழச்செய்தது: சரத்குமார் பகிர்ந்த புகைப்படம்

Wednesday, August 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாழ்க்கையில் கடந்து வந்த பாதையின் நிகழ்வுகளை மறக்காமல் நினைவு கொண்டு இருப்பவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று என்னை அவர் ஆசீர்வதித்து நெகிழச் செய்தது என்று பிரபல நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் நடிப்பில் உருவான சூப்பர்ஹிட் திரைப்படம் ’சூரியன்’. கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சரத்குமார், ரோஜா நடிப்பில், பவித்ரன் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பின்னர்தான் சரத்குமாருக்கு வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் சரத்குமார் ’சூரியன்’ படத்தின் தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களை விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கூறியிருப்பதாவது: என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த மிகப்பெரிய வெற்றிப்படம் ’சூரியன்’ திரைப்பட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் அவர்களை சந்திக்க நேரிட்டது. வாழ்க்கை பயணத்தை பற்றி இருவரும் பேசிக் கொண்டோம் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.