சின்மயி தைரியத்தை பாராட்டுகிறேன்: சரத்குமார்
- IndiaGlitz, [Monday,October 15 2018]
பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆரம்பத்தில் திரையுலகினர் கருத்து சொல்லாமல் மெளனமாக இருந்த நிலையில் தற்போது கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். சித்தார்த், விஷால் மற்றும் ஒருசில நடிகைகள் சின்மயிக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் நிலையில் தற்போது நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் தனது கருத்தை கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தைரியமாக குற்றம்சாட்டி உள்ளதை பாராட்டுகிறேன். இது வரவேற்க வேண்டிய ஒன்று. என்னை பொருத்தவரை பெண்கள் தாய்க்கு சமமானவர்கள். அவர்மீது அனைவரும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கலை உலகில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பெண்களை மதிக்கவேண்டும் என்பது நமது கலாச்சாரத்தில் உள்ளது.
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை வெளியுலகத்திற்கு தைரியமாக கொண்டு வந்தால் இந்த குற்றங்கள் செய்பவர்களுக்கு ஒரு பயம் வரும். அதைவிட முக்கியமாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வளர்ப்பிலேயே ஒருவருடன் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் என்று சரத்குமார் கூறினார்