ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: மத்திய அரசுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்

இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனாவால்‌ பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும்‌ கூலித்தொழிலாளர்கள்‌, அமைப்பு சாரா தொழிலாளர்களின்‌ நலத்‌திட்டங்களுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ சலுகை தொகுப்பினை மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ அவர்கள்‌ நேற்று அறிவித்திருந்தார்‌.

அதனை தொடர்ந்து பொருளாதார பாதிப்பை சரிசெய்ய 4 அம்ச திட்டமாக, போதுமான நிதி சந்தையில்‌ இருப்பதை உறுதி செய்தல்‌, வங்‌கிகள்‌ தாராளமாக கடன்‌ வழங்க ஏற்பாடு, கடனை இருப்பி செலுத்துவதில்‌ உள்ள நெருக்கடியை குறைத்தல்‌, சந்தையில்‌ ஏற்படும்‌ ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை என ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை பாராட்டி வரவேற்கிறேன்‌.

குறிப்பாக வங்கிகளிடம்‌ தனிநபர்கள்‌, தொழில்‌ நிறுவனங்கள்‌ வாங்‌கியுள்ள கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள்‌ கால அவகாசம்‌ வழங்கிடவும்‌, குறுகிய கால கடனுக்கான வட்டி 0.75% குறைத்தும்‌, ரெப்போ வட்டி விகிஇதம்‌ 5.15 விழுக்காட்டில்‌ இருந்து 4.4 விழுக்காடாக குறைத்தும்‌ ரிசர்வ்‌ வங்கியின்‌ கவர்னர்‌ அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே சமயம்‌, கொரோனா வைரஸ்‌ பாதிப்பு நிலை சீரான பின்பு, 3 மாத தவணைகளை ஒரே தொகையாக திருப்பி செலுத்துவதில்‌ உள்ள சிரமத்தை கருதி 3 மாதத்திற்கான தவணைத்‌ தொகையை மீண்டும்‌ ஒரு வருடமோ, இரண்டு வருடமோ சரிவிகிதத்தில்‌ பிரித்து அந்த தொகையையும்‌ இ.எம்‌.ஐ ஆக மாற்றி திரும்ப பெற்று கொள்ள பரிசிலித்து வங்கிகளுக்கு அறிவுறுத்த மத்திய அரசிடம்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா? ஊரடங்கையும் மீறி பரவும் வைரஸ்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவையும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்

33 கோடி கொரோனா நிவாரண நிதி கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்

நாடு முழுவதும் கொரோனா பயத்தில் தற்போது இருக்கும் நிலையில், கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது