கமல்ஹாசனை முந்தினார் சரத்குமார்

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்களுக்கு மூடப்பட்டது. ஆனால் இந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் தற்போது அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு கொடுத்துள்ளதால் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் இந்த போராட்டத்தில் நேரில் சென்று கலந்து கொள்ளவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்

அந்த வகையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தூத்துகுடிக்கு சென்று அப்பகுதி மக்களுடன் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் கமல் செல்வதற்கு ஒருநாளுக்கு முன்பே அதாவது இன்றே நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டார் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

48 வது நாளாக நடைபெறும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும் போராட்டக்களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்' என்று கூறியுள்ளார்.

 

More News

ஐபிஎல் 2018: ப்ரித்தி ஜிந்தா கனவை நிறைவேற்றுவாரா அஸ்வின்?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு நெருங்கிவிட்டதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணியும் போட்டியை எதிர்நோக்க தயாராகி வருகின்றது.

மீண்டும் மெரினாவில் போராட்டமா?

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனாவில் நடந்த இளைஞர்களின் போராட்டம் உலகமே வியக்க்கும் வகையில் நடந்தது. அனேகமாக தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் என்று இதனை கூறலாம்.

கால்கள் இழந்த காதலனை கைப்பிடித்த காதலி: இதுவல்லவோ உண்மை காதல்

காதலுக்கு கண்ணில்லை என்றும், காதல் உடல் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது என்றும் சினிமாவில் தான் வசனம் பேசமுடியும், நடைமுறை வாழ்க்கைக்கு அது ஒத்துவராது என்று பலர் கூறுவதுண்டு

மனைவி அடிக்க ஆரம்பித்துவிட்டால் கணவரால் எதுவும் செய்ய முடியாது: ஷிகர்தவான்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷிகர்தவான் மிகச்சிறந்த ஒப்பனிங் பேட்ஸ்மேன் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் பவுலிங் போட்ட பந்தை ஒரு பெண் வெளுத்து வாங்கியுள்ளார்.

பிறமொழி படங்களுக்கும் செக் வைப்பாரா விஷால்?

தமிழ் திரையுலகில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒற்றுமையுடன் கடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் நடந்து வருகிறது