ஆன்மீக பாதையில் சரத்குமார் - ராதிகா தம்பதி.. சொந்த பந்தங்களுக்கு தெரிவித்த நன்றி..!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான சரத்குமார் - ராதிகா தம்பதிகள் ஆன்மீக பாதையில் சென்றுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் சரத்குமார் மற்றும் ராதிகா. இந்த நிலையில் சரத்குமார் தனது குலதெய்வ கோயிலுக்கு மனைவி ராதிகாவுடன் சென்றதை தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்

தற்போது அவர் குலதெய்வ கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக புகைப்படத்துடன் ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் அனைவருடன் மேற்கொண்ட மனநிறைவான குலதெய்வ வழிபாட்டின் பலனாக, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருளாசி மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்த இனிய தருணத்தில் பிரார்த்திக்கிறேன்.

More News

கையில் க்யூட் குழந்தை.. ஆனால் முகம் சுளிக்க வைக்கும் காஸ்ட்யூம்.. ஸ்ரேயா சரண் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை ஸ்ரேயா சரண் தனது கையில் மகளை வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் அவரது க்யூட் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நெட்டிசன்கள் இன்னொரு பக்கம் ஸ்ரேயா

மின்னல் வேகத்தில் முடிந்த படப்பிடிப்பு.. ரிலீசுக்கு தயாராகும் கார்த்தியின் அடுத்த படம்..!

நடிகர் கார்த்தி நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்.. சீசனுக்கேற்ற மாஸ் டைட்டில்..!

'உறியடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிய நடிகர் விஜயகுமார், அதன் பிறகு 'உரியடி 2' மற்றும் சமீபத்தில் வெளியான 'பைட்கிளப்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்

விட்டுக்கொடுத்து வாழுங்கள்: 'இந்தியன் 2' நடிகைக்கு திருமண வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகைக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல்

பிரதோஷ விரதத்தின் மகிமை✨

பிரதோஷம் - குற்றமற்ற தினம்: "பிரதோஷம்" என்றால் "குற்றமற்றது" என்று பொருள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 - 6.00 மணி வரை பிரதோஷ காலம்.