பாராளுமன்ற தேர்தலில் சரத்குமார், ராதிகா இருவருமே போட்டியா? எந்த தொகுதியில்?

  • IndiaGlitz, [Thursday,March 07 2024]

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே சில திரை உலக நட்சத்திரங்கள் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருமே வரும் தேர்தலில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலக நட்சத்திரங்களான குஷ்பு, காயத்ரி ரகுராம், கௌதமி, ஷோபனா ஆகியோர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலையாள நடிகர் சுரேஷ்கோபி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் கங்கனா ரனாவத் உள்ளிட்ட இன்னும் சில நட்சத்திரங்களும் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவருக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் திருநெல்வேலி தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் சரத்குமாருக்கு வேறு தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் நடிகை ராதிகாவும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவார் என்றும் அவருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருமே வரும் தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆன்மீக Glitz-ல் Dr.Sudha Seshayyan அவர்களுடன் மகா சிவராத்திரி: அரிய ரகசியங்கள் அலசல்!

மகா சிவராத்திரி பற்றி நீங்கள் அறிந்திராத அரிய தகவல்களை Dr.Sudha Seshayyan அவர்கள் ஆன்மீக Glitz சேனலில் பகிர்ந்து கொள்கிறார்.

மகா சிவராத்திரி: ஈசனை அடைய ஒரே வழி? விரதம், பலன்கள், ரகசியங்கள்!

மகா சிவ ராத்திரி - இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இந்த புனித நாளில், பக்தர்கள் இறைவன் சிவனை வழிபட்டு, அவரது அருளைப் பெறுகின்றனர்.

விக்ரமின் 'சியான் 62' படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விக்ரம் நடித்து முடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தை அதாவது 'சியான் 62' படத்தை 'சித்தா'

அதிமுகவில் இணைந்த ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.. மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஈபிஎஸ்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சற்றுமுன் அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரை அதிமுகவின் பொதுச்

மதுரை ஆர். முரளிதரனின் 'வாயுபுத்ரா'.. பென்சில்வேனியாவில் பிரிமியர் ஷோ..!

உலகப் புகழ்பெற்ற நடன ஆசிரியர், இசையமைப்பாளர், நடனக் கலைஞர், நடன இயக்குநர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் இயக்குனரான மதுரை ஆர். முரளிதரன் அவர்களால் உருவாக்கப்பட்ட 'வாயுபுத்ரா' என்ற