close
Choose your channels

பூச்சிமுருகன் புகாருக்கு சரத்குமார் பதிலடி

Thursday, March 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சங்கத்தின் கணக்குகளை முழுவதுமாக ஒப்படைக்கவில்லை என்றும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மீது புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டிய நிலையில் இன்று சென்னை போலீஸ் கமிஷனரை பூச்சிமுருகன் சந்தித்து சரத்குமார் மீது புகார் மனு ஒன்றை அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த புகாருக்கு பதிலடியாக பூச்சிமுருகன் மீது சரத்குமார் பதில் புகார் அளித்துள்ளார்.

சரத்குமார் தனது புகாரில், 'தான் தற்போது தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், மேலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவராக இருப்பதாகவும், தனது புகழுக்கு களங்கும் கற்பிக்கும் விதத்தில் பூச்சிமுருகன் ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளதாகவும், தொடர்ந்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் பூச்சிமுருகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்தின் அனைத்து கணக்குகளும் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு முறையாக சமர்ப்பிக்கபட்டுவிட்டதாகவும், இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கடிதத்திற்கும், முறையாக விளக்க கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment