எம்.ஜி.ஆருக்கு நடிகர் சரத்குமார் புகழாரம்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

கோலிவுட் திரையுலகினர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.ஜி.ஆருக்கு அறிக்கை ஒன்றின்மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

தெளிந்த சிந்தனை, மக்கள் மேல் பரிவு, நாட்டை முன்னேற்றுவதில் தீவிரம், புது கலைகளையும், அறிவையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம், தீர்க்கமான அரசியல் ஞானம், அனனத்து தரப்பினரையும் அணைத்து செயல்படுவதில் முதிர்ச்சி, சிக்கலான தருணத்தையும் எதிர்கொள்ளும் வீரம், எதிரியையும் அன்பால் வெல்லக்கூடிய திறன், எதிர்மறை கருத்துக்களையும் தேவையென்றால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம், கட்டான உடலமைப்பு, அதன் மூலம் இளைஞர்களை வழிநடத்துதல்

இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த நற்குணங்களை இளைஞர்களுக்கு விதைப்பது இன்றைய அரசியல் தலைவர்களின் தலையாய கடமை

நாளைய தமிழகத்தில் இளைஞர்களில் பலர் பெருந்தலைவரையும், புரட்சி தலைவரையும் பின்பற்றி பொது வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கொள்வோம். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.