கேன்ஸ் திரைப்பட விழாவில் சந்தோஷ் சிவனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்: குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Sunday,May 26 2024]

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் மட்டுமின்றி இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பதும் இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் ஒளிப்பதிவு செய்து வந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்

அதன் பின் ’ரோஜா’ ’இந்திரா’ ‘இருவர்’ உட்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும் ஏராளமான ஹிந்தி திரைப்படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’இருவர்’ மற்றும் ’உயிரே’ ஆகிய படங்களுக்காக இவர் தேசிய விருது பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒளிப்பதிவு துறையில் பல சாதனைகள் செய்த சந்தோஷ் சிவன் அவர்களுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் ’தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கேன்ஸ் திரைப்பட விழாவில் கௌரவ விருது பெற்று இந்தியாவை பெருமைப்படுத்திய சந்தோஷ் சிவனுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்